menu account_circlePartner Login

Miss Eswaran Sowmiya

2 years 3 months

chat_bubble_outline

visibility

9432

thumb_up_off_alt

1

Description

சுவிஸைப் பிறப்பிடமாகவும், இலங்கையை வதிவிடமாகவும் கொண்ட ஈஸ்வரன் சௌமியா அவர்கள் 17-01-2022 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் தங்கமணி தம்பதிகள், காலஞ்சென்றவர்களான அம்பலவாணர் இராசம்மா தம்பதிகளின் அன்புப் பேத்தியும்,ஈஸ்வரன் தேன்மொழி(அமுதா) தம்பதிகளின் பாசமிகு இளைய மகளும்,பிரவீணா அவர்களின் செல்லத் தங்கச்சியும்,யோகேஸ்வரன்- மங்கையற்கரசி, மகேஸ்வரன்- வனிதா, பரமேஸ்வரன்- ஜெயகௌரி, சிவநேஸ்வரன்- சுபாஜினி மற்றும் காலஞ்சென்ற சங்கரலிங்கம்- நாகேஸ்வரி ஆகியோரின் பெறாமகளும்,மனோகரன்- கலாதேவி, காலஞ்சென்ற வாசுதேவன்- புவனேஸ்வரி, ரங்கநாதன்- விக்னேஸ்வரி ஆகியோரின் அன்பு மருமகளும்,வசந்தராசன்- யாழினி, தினேஸ்- சர்மிளா, தவக்குமாரன்- சுபரேகா, லாவண்ஜன்(கண்ணன்), ராஜன்- பிரதுஷா, செந்தூரன், கேதீஸ்வரன், மிதுநேசன், நிரோஸ், யாபேஸ், தவரூபன், கஸ்தூரி, சுபனேசன், சுகுனேசன் ஆகியோரின் பாசமிகு உடன் பிறவாச் சகோதரியும்,ஜீவிந்தன், தினேஸ், பிரியந், தர்சிகா, நிரூபன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,அஸ்வின், அஸ்விகா, ஆதிகா, ராகவி ஆகியோரின் பாசமிகு குட்டி அன்ராவும் ஆவார்.அன்னாரின் பூதவுடல் 22-01-2022 சனிக்கிழமை முதல் 23-01-2022 ஞாயிற்றுக்கிழமை வரை Jayaratne Funeral Directors (Pvt) Ltd 2B Elvitigala Mawatha, Colombo- 08, Sri Lanka எனும் முகவரியில் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் ந.ப 12:00 மணிமுதல் பி.ப 02:00 மணியளவில் Kanatte Cemetery Borella எனும் முகவரியில் இறுதிக்கிரியை நடைபெறும்.