2 years 7 months
யாழ். தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Herxheim ஐ வசிப்பிடமாகவும் கொண்ட முருகன் அருள்ராசா அவர்கள் 15-09-2021 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னவன் முருகன் சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், யோகன், காலஞ்சென்ற மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,யோகலெட்சுமி(யோகா) அவர்களின் அன்புக் கணவரும்,ஆர்த்தி, றக்சனா, அருன்சன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,தங்கமணி, வேலையா, புனிதவதி, காலஞ்சென்ற புஸ்பமலர், இராசமலர், சோதிராசா, சந்திரமலர், கோமதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,சுப்பிரமணியம், மகேஸ்வரி, காலஞ்சென்றவர்களான இராமசாமி, தங்கராசா, கந்தசாமி மற்றும் வசந்தி, சந்திரகாந்தன், ஆனந்தராசா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,காலஞ்சென்ற டெல்சன், சாந்தி, பமிலன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,வவா, கோகிலா ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.